தமிழ், தெலுங்கில் நடிக்க ஆர்வம் – டாப்சி..!!
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக இருந்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். டாப்சி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்த பட்லா திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் ‘கேம் ஓவர்’ என்ற படத்தில் டாப்சி நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே அதிக விருப்பம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழ் படங்களின் மூலம்தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். பெரிதாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் ஹீரோயினாக அறிமுகம் கிடைத்தது இங்குதான்.
பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்தன. நல்ல படங்களில் நடித்தேன். எவ்வளவு பாலிவுட் படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு சினிமாவை விட்டுவிட மாட்டேன்.
இங்குதான் என் திரையுலக வாழ்க்கை தொடங்கியது. பாலிவுட்டில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்று புத்தாண்டில் தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.