தலையணையில் இருந்து பேப்பருக்கு மாறிய நடிகை..!!!
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு தலையணை சவால் வந்தது.
அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.
நடிகை பாயல் ராஜ்புட் பேப்பரை ஆடையாக வடிவமைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்
தற்போது பேப்பரை ஆடையாக வடிவமைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட், உதயநிதி ஸ்டாலின் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார்.