‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..!!!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகுமார் எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: “அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன். மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன். இமயத்தின் உச்சம் தொட்டும், என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான். போய் வா தம்பி” என கூறியுள்ளார்.