ஏலே படம் வெளியாவதில் சிக்கல்..!
சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. மேலும் 27ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள்.
மாஸ்டர் சர்ச்சையால் தியேட்டரில் ரிலீஸாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் வெளியிடவே அனுமதி அளித்துள்ளார்கள்.
ஏலே
இந்த திடீர் சிக்கலால் ஏலே நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.